இலங்கையில் இன்று (ஜூன்.11) நடைபெற்ற 2வது ஆட்டத்தில் இந்தியா ஏ ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதின. மழையால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 25.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்காததால் டிஎல்எஸ் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.