கோவையில் ஆன்லைன் மோசடி: 6 பேரிடம் ரூ. 1 கோடிக்கு மேல் சுருட்டல்

ஆன்லைன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து, 6 பேரிடம் மொத்தம் ரூ. 1 கோடியே 6 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தடாகம், டாடாபாத், குனியமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆசிரியர் உள்ளிட்டோர் திருமணம், கிரிப்டோ முதலீடு, கல்வி உதவித்தொகை போன்ற பெயர்களில் ஏமாற்றப்பட்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொதுமக்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை, அதிக லாபம் தரும் முதலீடு போன்ற வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

సంబంధిత పోస్ట్