சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 9.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை எம்.பி. கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார். பொதுமக்களிடம் இதனை முறையாக பராமரிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும் அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.