தொகுதி மறுவரையறை தொடர்பான புத்தகத்தில் பெரியார் தெரிவித்ததாக தவறான கருத்துகளை பதிவு செய்துள்ளதாகக் கூறி, ரூ.1 கோடியே ஆயிரம் மான நஷ்டஈடு கேட்டு தி.க. தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். 'பாரதத்தின் சிறந்த ஜனநாயகத்துக்கான தொகுதி மறுவரையறை மற்றும் மாநிலங்கள் சீரமைப்பு' என்ற ஆங்கிலப் புத்தகத்தில், பிராமணர்களை ஒழிக்க வேண்டும் என பெரியார் கூறியதாக தவறான தகவல்களை பதிவு செய்துள்ளதாக எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.