திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கன்னிகாபுரம் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாலப் பராமரிப்புப் பணியின்போது, தண்டவாளம் 20 மீட்டர் தூரம் இறங்கியதால் பெங்களூரிலிருந்து பாகல்பூர் சென்ற அங்கா எக்ஸ்பிரஸ் ரயில் லோகோ பைலட் அதிர்வு உணர்ந்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பெங்களூர்-சென்னை மார்க்கத்தில் சென்ற ரயில்கள் நிறுத்தப்பட்டு, ரயில்வே பணியாளர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கா எக்ஸ்பிரஸ், பொக்கோரோ, பிருந்தாவன், தன்பாத், சதாப்தி உள்ளிட்ட விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் தாமதமாகச் சென்றன.